Friday, November 16, 2012


பிக்குணி சங்கமித்தாவின் இலங்கை விஜயத்திற்கான முத்திரை  சின்னம் - யாழ் நாக விகாரை
யாழ் நகரின் ஸ்டேன்லி வீதியில் காணப்படுகின்றது யாழ் நாக விகாரை .யாழ் மண்ணில் பௌத்த மதத்தின் முக்கிய வணக்கஸ்தலமாக காணப்படும் இவ் யாழ் நாக விகாரை ,பிக்குணி சங்கமித்தா அனுராதபுர நகருக்கு விஜயம் மேற்கொண்ட வேளை அதன் நினைவாக யாழ் மண்ணில் கட்டப்பட்டது . இவ் விகாரை பௌத்த மதத்திற்கு உரித்தானதாக காணப்பட்டப் போதிலும் அனைத்து இன மக்களாலும் மத இன வேறுபாடின்றி வணங்கப் படும் புனித தளமாக காணப் படுகின்றது . பௌத்த மத கலாச்சாரத்தினை பிரதிபலிப்பதாக இவ் விகாரை  காணப்பட்ட போதிலும் இந்து  மத கலாசாரத்தையும்  பிரதிபலிப்பதாகவே காணப் படுகின்றது. யாழ் கலாச்சாரத்தின் இக்கால நிலைப் பாடு தொடர்பில் இவ்
விகாரையின் பிரதம பிக்கு தொம தொழுவோ சுமங்கல ஹிமியா கருத்து தெரிவித்தப் போது                      " இங்குள்ள மக்கள் வடுக்களை சுமந்த வாழ்வியலை மேட்கொன்டப் போதும் அவர் தம் கலாசாரத்தில் எவ்வித மாற்றமும் இன்றியே வாழ்வதாகவும் யாழ் மண்ணின் கலாசார நிலைமை மிக உயரிய நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார் "யாழ் நாக விகாரையானது கலாசார சின்னமாக காணப்பட்ட போதிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத் துறையினர் வருகை தரும் முக்கிய இடமாகவும் காணப் படுகின்றது

No comments:

Post a Comment