Friday, November 16, 2012


கவனிப்பார் அன்றி காணப்படும் யாழின் தொல்பொருள் சின்னங்கள் -யாழ் நூதனசாலை என்றப் பெயரில் காணப்படும் சிறிய குடில் .
யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களையும் பிரதிபலிக்கும் பண்டைய தொல் பொருள் சின்னங்களை பேணி பாது காக்கும் இடமாக காணப்படுகின்றது  யாழ் நூதனசாலை . யாழ் நகரிலிருந்து பலாலி நோக்கி கிலோமீற்றர் தூரம் செல்லும் போது நாவலர் வீதியில் கிலோமீட்டர் தூரத்தில்  இடது புறத்தில் காணப் படுகின்றது இவ் நூதனசாலைஸ்ரீ ஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் வீட்டின் ஒரு பகுதி சுவருடன் காணப்படும் சிறிய குடிலே யாழ் நூதன சாலையாக காணப்படுகின்றது.தொல் பொருள் சின்னங்களை பாதுகாப்பது எதிர்கால சந்ததியினர் அது தொடர்பில் தெரிந்துக் கொள்வதற்க்கும் வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதட்குமே  ஆகும் . ஆனப் போதிலும் யாழ் மண்ணில் நூதன சாலை ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வியினை கேட்கும்  அளவிற்கு காணப்படுகின்றது யாழ் நூதன சாலை. எந்தவித உட்கட்டமைப்பு வசதிகளும் இன்றி அதிகால  சுவர்களுடனே இவ் யாழ் நூதன சாலை காணப் படுகின்றது .யாழ் மண்ணின் கலாசாரத்தினை பிரதிபலிக்கும் முக்கிய ஆவணப் பொருள்கள் மட்டும் பழமை வாய்ந்த பொருட்கள் என்பன இவ் நூதன சாலையில் காணப் பட்டுகின்ரப் போதும் இவ் நூதன சாலை தொடர்பில் எந்த ஒரு அரச நிறுவனங்களோ அரச சார்பற்ற நிறுவனங்களோ எவ் வித நடவடிக்கைகளும் எடுக்க வில்லை  என்பது இவ் நூதனசாலையின் மேற்பார்வையாளரின்  கருத்து ஆகும்
இவ் யாழ் நூதன சாலையின் நிலைமை இவ்வாறே இன்னும் சிறிது காலத்துக்கு தொடருமானால் யாழின் தொல் பொருள் சின்னங்களுக்கு யாது நடக்கும் என்று தெரியாத நிலையிலேயே இவ் நூதனசாலை காணப்படுகின்றது .யாழின் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பது  இலங்கை அரசின் கடமை மட்டும் அல்ல . யாழ் மக்களின் பொறுப்பும் ஆகும். இதேவேளை யாழ் மண்ணுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் கடமையும் கூடநூதன சாலை என்ற பெயரில் இயங்கும் இவ் சிறு குடில் இவர்களின் பார்வைக்கு எப்போது பட்டு சிறந்த கட்டிடத்துடன் கூடிய நூதன சாலையாக மாறும் என்பது........................????

No comments:

Post a Comment